உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

வீடுகளுக்கு முன் கழிவுநீர்மதுரை முனிச்சலை இஸ்மாயில்புரம் 11வது தெருவில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதியில் சாக்கடைநீர் செல்கிறது. இதில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதனால் தொற்று நோய் அபாயத்தில் உள்ளோம். --பாஸ்கர், இஸ்மாயில்புரம்கழிப்பிட வசதி தேவைராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை, உடைமாற்றும் அறை வசதி இல்லை. இதனால் பக்கதர்கள் அவதிப் படுகின்றனர். கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மாரிமுத்து, ராமேஸ்வரம்பாதசாரிகள் அவதிமதுரை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள பகுதியில் பிளாட்பாரங்களில் மூடைகளை அடுக்கி வைத்திருப்பதால் பாதசாரிகள் செல்ல முடியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கணேஷ்பாபு, கீழவாசல்தெருவிளக்கு எரியவில்லைமதுரை மாநகராட்சி 71வது வார்டு பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோடு, வாகேஸ்வரி 2வது தெருவில் விளக்குகள் எரியவில்லை. ரோடு மேடும் பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவான நடவடிக்கை தேவை.-ரவிக்குமார், பொன்மேனிபுதிய சாலையில் பள்ளம்மதுரை டி.வி.எஸ்., நகர் சத்யசாய் நகர் பகுதியில் புதிய ரோடு அமைத்த சில மாதங்களிலே பள்ளம் உருவாகிவிட்டது. மாநகராட்சியினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.-ஸ்ரீநிவாசன், சத்யசாய் நகர்நிழற்குடை தேவைமதுரை கூடல்நகர் வானொலி நிலைய பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைத்துதர வேண்டும். பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.- குணசீலன், கூடல்நகர்தொற்று நோய் அபாயம்மதுரை மாநகராட்சி 75வது வார்டு ஜெய்ஹிந்துபுரம் மார்கெட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மார்கெட்டுக்கு செல்ல முடியவில்லை. சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை தேவை.-மோகன், சத்யசாய் நகர்தனி வழித்தடம் தேவைமதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களை ஒரே வழித்தடத்தில் நிறுத்தி வைப்பதால் பயணிகள் குழப்பமடையும் நிலை உள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சபா, சிம்மக்கல்நெட்வெர்க் தடையால் அவதிமதுரை தலைமை தபால் அலுவலகத்தில் அடிக்கடி நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.-சங்கர்ராம், பைக்காரா, மதுரைபள்ளங்களால் விபத்துமதுரை தெற்குவெளி வீதியில் பெட்ரோல் பங்க் அருகே ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அடிக்கடி விபத்து நடந்து விடுகிறது. பள்ளங்களை மூட வேண்டும்.- ராமநாதன், மதுரைடூவீலர்களால் தொல்லைமதுரை தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் டூவீலர்களை நிறுத்தி செல்வதால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நெரிசலால் முகம் சுளிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மாரிமுத்து, தெற்குவாசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை