உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்: மாதா அமிர்தானந்தமயி அறிவுரை

விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்: மாதா அமிர்தானந்தமயி அறிவுரை

மதுரை; '‛விட்டுக்கொடுக்கும் பண்பால் மகிழ்ச்சி பெறலாம். ஆணவம் கூடாது'' என மதுரையில் மாதா அமிர்தானந்தமயி பேசினார். மதுரை பசுமலையில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு மாதா அமிர்தானந்தமயி வந்துள்ளார். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று பக்தர்களிடம் பேசியதாவது: வாழ்க்கையை கடல், கவிதை, கனவு, நீண்ட துாரம் பயணம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு ஒப்பிடுகின்றனர். ஆனால் பொறுமை, தியாகம், பணிவு, திறந்த மனப்பான்மை, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம், இதுவே முதன்மையானது. வாழ்க்கை நம் சிற்றறிவிற்கு அப்பாற்பட்ட மர்மம். அது எல்லையற்றது என்று முனிவர்கள் போற்றினர். பணிவை வளர்க்க வேண்டும். மற்றவருடைய பொருளை பலவந்தமாக கைப்பற்ற வேண்டும் என நினைத்தல் கூடாது.ஆற்றில் நீர் குடிக்க குனிகிறோம். அதுபோல இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். இதற்கு தடையாக இருப்பது ஆணவம். ஆணவத்தால் மற்றவரை விட நமக்கு தான் இழப்பு. இந்த உலகில் மனிதன் தவிர அனைத்து உயிர்களும் அதன் விதிமுறைப்படியே வாழ்கிறது. மனிதன் இயற்கை விதிமுறையை பின்பற்றி வாழ வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும். குழந்தைகளுக்கு அலைபேசியை கொடுத்து வளர்ப்பது தவறு. இதனால் இளமையிலே கண் மங்கிவிடும், மன அழுத்தம் ஏற்படும். குழந்தைகள் புராணக் கதைகள் கேட்பது, கடவுள் சித்திரங்கள் வரைவது போன்றவற்றால் மனநலம், வலிமை ஏற்படும். அன்பிலே பிறந்து, வளர்ந்து, வாழ்வது மனிதனின் உண்மையான இயல்பு. இதை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. இவ்வாறு பேசினார்.பஜனை, சத்சங்கம், தியானம் நடந்தன. மதுரை மகாத்மா கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரேமலதா, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா மலரை சுவாமி பரமானந்தா வெளியிட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

hrk
பிப் 19, 2025 11:38

இவர்கள் நடத்தும் மருத்துவமனை கழிவுகள் தமிழ் நாட்டில் கொட்ட படுகிறது


VSMani
பிப் 18, 2025 16:54

இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். பொருள் பணம் இல்லார்க்கு இவ்வுலகம் இப்பிரபஞ்சம் இல்லை. வள்ளுவர் பல வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டாரு.


VSMani
பிப் 18, 2025 16:52

பணிவு அவசியம் என்று கூறிவிட்டு தரையில் காலுக்கடியில் ஒரு வெள்ளைக்கார பெண்ணை உட்க்கார வைப்பது, குடை பிடிக்க ஒரு ஆள். இதுதான் பணிவோ? இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவைவிட பணம்தான் மிக அவசியம்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 16, 2025 01:11

இந்தம்மா பணத்தாசையை விட்டுக்கொடுத்தல் நல்லது.


VSMani
பிப் 18, 2025 16:57

இவரது மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டுக்கு 20 முதல் 25 லட்ச ரூபாய் ஒரு வருடத்திற்கு. ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாது. ஊருக்குத்தான் உபதேசம்.


A.Gomathinayagam
பிப் 15, 2025 14:19

ஒருவரே விட்டு கொடுத்தால் மகிழ்ச்சி இல்லை ,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தால் மட்டுமே மகிழ்ச்சி


முக்கிய வீடியோ