உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செவ்வந்தி பூக்கன்றுகள்

செவ்வந்தி பூக்கன்றுகள்

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், லக்னோ சி.எஸ்.ஐ.ஆர். தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு செவ்வந்திப் பூ சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கியராஜ் துவக்கி வைத்தார். லக்னோ ஆராய்ச்சியாளர் விஜய் ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.விவசாயிகளுக்கு 2 லட்சம் செவ்வந்திப் பூ கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. லக்னோ ஆராய்ச்சி மாணவர் சின்னக்கருப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ