உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமித்ஷா அ.தி.மு.க., ஆட்சி மாணிக் தாகூர் கிண்டல்

அமித்ஷா அ.தி.மு.க., ஆட்சி மாணிக் தாகூர் கிண்டல்

திருமங்கலம்: கீழஉரப்பனுாரில் புதிய கிராம பொதுச்சாவடி கட்டுவதற்கான பூமி பூஜை மாணிக் தாகூர் எம்.பி., தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் 'தீபாவளிக்கு சிறப்பு செய்தி வரும்' என பிரதமர் தெரிவித்துள்ளார். மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வெளிநாட்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை மோடி கைவிட வேண்டும். சேலத்தை விட்டு பழனிசாமி இப்போதுதான் வெளியில் வந்துள்ளார். அமித்ஷா தலைமையில் அ.தி.மு.க.,வை நடத்தி வருகிறார். 2026ல் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் அமித்ஷா தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி