ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
மதுரை: மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லபாண்டி 26. சில தினங்களுக்கு முன் ஆட்டோ வாங்குவதற்காக இவரது அம்மா கொடுத்த பணத்தை நண்பர்களிடம் கொடுத்தார். அவர்கள் திருப்பித் தர மறுக்கவே தகராறில் ஈடுபட்டார். பின் கடன் பெற்றுஆட்டோ வாங்கிய நிலையில்ஆர்.சி.,புத்தகம் நண்பர் பெயரில் இருந்தது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துஅதை மாற்றித்தர மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த முன்விரோதம் காரணமாகநேற்று இரவு 10:00 மணியளவில், அலைபேசி அழைப்பு வந்ததையடுத்து வீட்டிலிருந்து வெளியில் சென்ற செல்லபாண்டியை, கள்ளந்திரி பஸ் ஸ்டாப் பழக்கடை அருகே டூவீலரில் வந்த நால்வர் வெட்டிக் கொலை செய்தனர். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் அப்பன் திருப்பதி இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.