வளைகாப்பு விழாக்கள்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயில்களில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நேற்று நடந்தது. ஹார்விபட்டி லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக அம்மனுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வளையல் அலங்காரம் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு களி, ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கிரிவலம் ரோட்டிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, ஐந்து வகை சாதம் பரிமாறப்பட்டது.