உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு

மதுரை: வழக்கறிஞர் முகம்மதுமுகைதீன் எழுதிய 'அமைதி நிறையப் பேசும்' புத்தக வெளியீட்டு விழா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.பி.எச்.ஏ.ஏ., வழக்கறிஞர் சங்க அரங்கில் நடந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் தலைமை வகித்தார். புத்தகத்தை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட நீதிபதி ஆர்.விஜயகுமார் பெற்றுக் கொண்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''புத்தக ஆசிரியர் போல் மத நல்லிணக்கத்தை பின்பற்றினால் எந்த பிரச்னையும் ஏற்படாது,'' என்றார். வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாசராகவன், பிரபு ராஜதுரை, சாமிதுரை, சங்க தலைவர் ஆண்டிராஜ், செயலாளர் அன்பரசு பங்கேற்றனர். அரசு வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை