மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கு தண்டனை
09-Apr-2025
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் சந்தமநாயக்கன்பட்டி செந்தில், மனைவி ரேவதி. இவர்களிடம் 2021 ல் 60 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுரை திருவாதவூர் அய்யம்பிள்ளை. இவரிடம் 2017 ல் பைபாஸ் ரோடு பகுதியில் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்குகளின் விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
09-Apr-2025