நடைதிறப்பு மாற்றம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். செப். 8 அதிகாலை கிரகண பூஜை முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை நடப்பதோடு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.