உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

மதுரை: மதுரை திருமங்கலம் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில்  துவரிமான் – கீழமாத்துார் சந்திப்பு பகுதியில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதை குண்டும் குழியுமாக  உள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் தவியாய் தவிக்கின்றனர். மருத்துவ அவசரத்திற்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. எனவே, தற்காலிக மாற்றுப் பாதையை  தரமாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sesh
செப் 17, 2026 12:57

தரமான மாற்றுப்பாதை அமைத்துவிட்டுத்தான் - பாலம் வேலை ஆரம்பித்துஇருக்கவேண்டும் , இங்கு பொது மனிதனுக்கு மரியாதை கிடையாது .


புதிய வீடியோ