உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு

மகன் தள்ளிவிட்டதில் கத்திரிக்கோல் குத்தி போதை தந்தை சாவு

மதுரை:போதையில் அடித்த தந்தை, மகன் தள்ளிவிட்டு விழுந்ததில் கத்திரிக்கோல் குத்தி உயிரிழந்தார். மதுரை, ஆனையூரை சேர்ந்தவர் கண்ணன், 40; கொத்தனார்; இவரது மனைவி பாரதி, 32. இவர்களுக்கு, 9, 7 வயதில் மகன், 5 வயது மகள் உள்ளனர். கண்ணன் அடிக்கடி குடிபோதையில், மனைவி, பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த கண்ணன், 9 வயது மகன், தம்பி, தங்கையுடன் விளையாடியபோது, கண்ணன் மகனை அடித்தார். அப்போது மகன் தள்ளிவிட்டதில், கண்ணன் நிலைக்குலைந்து விழுந்தார். அங்கிருந்த கத்திரிக்கோல் கண்ணன் தொடையில் குத்தியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். இதையறியாத மகன், 'வழக்கம்போல் போதையில் தந்தை படுத்துள்ளார்' எனக்கருதி மீண்டும் விளையாட ஆரம்பித்தார். பாரதி, கண்ணன் உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே கண்ணன் இறந்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி