உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரை : மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு அறிவியல், கணித உபகரணங்கள் வழங்கும் விழா சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.அவர் பேசுகையில் மாணவர்களின் கணித, அறிவியல் ஆர்வம், திறமையை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் 442 அரசு பள்ளிகளில் பயிலும் 6 -8ம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. உபகரணங்கள் பெறும் கருத்தாளர்கள் இத்திட்ட செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணனமுருகன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல்குமரன், வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மலர்ச்செல்வி, மணிமேகலை மற்றும் கருத்தாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ