நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை (பிப்.21) காலை 10:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்கலாம்.