உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் கட்டடங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் கட்டடங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் விதிமீறல் கட்டடங்கள் உள்ளதாகவும், எதிராக நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை குமார் 2011 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோயில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது மாநகராட்சி தரப்பு: இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட 1869 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.அவர்கள், 'கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ.,உயரத்திற்கு மேல் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணை தற்போது அமலில் இல்லை. அது தங்களுக்கு பொருந்தாது. இக்கட்டடங்கள் 1997 க்கு முன் கட்டப்பட்டவை. விதிமீறல் எதுவும் இல்லை,' என ஆட்சேபனை தெரிவித்தனர். உயரக்கட்டுப்பாடு தொடர்பான அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் 2010 ல் ரத்து செய்துவிட்டது. இவ்வாறு தெரிவித்தது.நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: உயரக்கட்டுப்பாடு தொடர்பான அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மாநகராட்சி தரப்பு தெரிவித்த விளக்கத்தை பதிவு செய்து இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை