உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலி

ஆண்டிபட்டி, : மதுரை சுப்பிரமணியபுரம் மீனாம்பிகை நகர் அல்லாபக்ஸ் 41. பீரோ கம்பெனி ஊழியர். மனைவி,இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் கம்பத்தில் தனது தாயார் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க டூவீலரில் சென்றார். இரவு 8:00 மணிக்கு ஆண்டிபட்டி கணவாய் அருகே நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி