| ADDED : ஜூலை 30, 2011 03:19 AM
மதுரை:மதுரையில் நிலமோசடி, இடஆக்கிரமிப்பு வழக்குகளில் கைதாகும் தி.மு.க.,
நிர்வாகிகள் தொடர்ந்து பாளையங்கோட்டை, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு
வருகின்றனர்.நிலமோசடி வழக்கில் கைதான தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு
சுரேஷ்(சுரேஷ்பாபு), நகர் செயலாளர் தளபதி உட்பட 4 பேர் பாளை சிறையிலும்,
வீடு ஆக்கிரமிப்பில் கைதான அட்டாக் பாண்டி திருச்சி சிறையிலும்
அடைக்கப்பட்டனர்.நேற்று வீடு, கடை ஆக்கிரமிப்பில் கைதான மாநகராட்சி கிழக்கு
மண்டலத் தலைவர் குருசாமி பாளை சிறையிலும், நிலமோசடி வழக்கில் சரணடைந்த
தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி திருச்சி சிறையிலும் நேற்றிரவு
அடைக்கப்பட்டனர்.