உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை

மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை

மதுரை: முல்லைப்பெரியாறு, வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் திருமங்கலம் பிரதான கால்வாய்களின் மூலம் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ள நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நகர்மயமாதல் அதிகரித்துள்ளதால் பாசனப்பரப்பை மறுசீரமைப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கருக்கு இருபோக சாகுபடியும் மேலுார், திருமங்கலம் பகுதிகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசனத்தையம் நம்பியுள்ளன. உசிலம்பட்டி பகுதி மானாவாரி என்பதால் அப்பகுதி விவசாயிகள் போராடி 58ம் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தனர். இப்போது வைகை அணை நிரம்பும் நிலையில் உசிலம்பட்டி, நிலக்கோட்டை சேர்த்து 35 கண்மாய்களுக்கு ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. எல்லா வயல்களையும் பாசனத் தண்ணீரோடு இணைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. அந்த வகையில் பாசனமில்லாத எஞ்சிய பகுதிகள் என்றால் மதுரையில் பாலமேடு, அலங்காநல்லுார் தெற்குப்பகுதி தான். அதாவது சிறுமலைக்கும் முல்லைப்பெரியாறு பாசனத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. செம்மனிப்பட்டி வரை பாசனத்தண்ணீர் கிடையாது. கிட்டத்தட்ட 6000 ஏக்கர் நிலங்கள் மானாவாரியிலும் சாத்தையாறு அணையின் கீழும் உள்ளன என்கின்றனர் விவசாயிகள். கிடப்பில் சர்வே திட்டம் அவர்கள் கூறியதாவது: அணைப்பட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து நிலக்கோட்டை வழியாக வாடிப்பட்டியின் வடபுறம் மலையடிவாரம் வழியாக கொண்டு வந்து வாடிப்பட்டி, செம்மினிபட்டி, சாத்தையாறு அணை நீர்வரத்துடன் சேர்ப்பதற்கு தமிழக அரசு ஆய்வு செய்தது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் பாலமேடு முழுவதும் பாசனப்பகுதியாக மாறிவிடும். இதை ஏற்கனவே பலமுறை சர்வே செய்யப்பட்டும் திட்டம் கிடப்பில் உள்ளது. மானாவாரி கண்மாய்கள் பயன்பெறும் உசிலம்பட்டி 58 ம் கால்வாய் வெட்டியதைப் போல பாலமேடு, அலங்காநல்லுாருக்கும் கால்வாய் வெட்டவேண்டும். மறுசீரமைப்பு அவசியம் மதுரை நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஆனையூர், ஊமச்சிகுளம், திருப்பாலை, கருப்பாயூரணி, தாமரைப்பட்டி, தண்டலை, குலமங்கலம் பகுதி இருபோக சாகுபடி நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது அதிகரித்துள்ளது. பாசனப்பரப்பு சுருங்கி விட்டதால் இப்பகுதிகளுக்கு பாசனத்தண்ணீர் விடுவது வீணாகிறது. இதனால் விவசாயம் எங்கு நடக்கிறதோ அங்கு தண்ணீரை மடைமாற்றம் செய்ய வேண்டும் எனில் முதலில் பாசனப்பரப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாசனப்பரப்பு, பாசன கால்வாய் ஆகியவற்றை சர்வே எடுத்து உண்மையான பாசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழிகாட்ட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
அக் 25, 2025 09:46

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார் என்பதைக் காண முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் வாய்க்கால்கள் உடைபடுதல், நீர் தேக்கம், மண் சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இத்தரக்குறைவான பணிகளுக்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் பணிகளின் தரம் கண்காணிக்கப்படாமல் போவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பணிகளுக்குரிய மேற்பார்வை, சோதனை, மற்றும் தரச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நகராட்சி பொறுப்பாளர்களால் முறையாக செய்யப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்கது, மழைக்காலத்தில் rainy season பணிகள் நடைபெறும் போது ஒப்பந்ததாரர் வாய்க்கால்களின் சுற்றுப்பகுதியில் மணல் நிரப்புதல் sand filling செய்யாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக பல இடங்களில் மண் தள்ளாடுதல், குழிகள் உருவாகுதல், மற்றும் நடைபாதைகள் sidewalks சரிவது போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம், துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும். மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும். குறிப்பாக, மரண் குழிகளை maran kulikalai உடனடியாக உண்டுபண்ணும் undupannum பொறுப்பை திருமங்கலம் நகராட்சி ஏற்று, உரிய தகடுகளால் மூடி, பணிகளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். நடவடிக்கை வேண்டியது: 1. ஒப்பந்ததாரரின் பணிகளைத் தரச் சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 2. பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதைகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகடுகள் மூலம் மூட வேண்டும். 4. நகராட்சி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை