உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

மதுரை:சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, கீழ்க்காணும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப். 10 முதல் நவ. 9 வரை மதுரை - சென்னை எழும்பூர் 'பாண்டியன்' ரயில் (12638), அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், பாண்டியன் ரயில் (12637), வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்படும். செப். 11 முதல் நவ. 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (22661), மாலை 6:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (22662), செப். 10 முதல் நவ. 9 வரை காலை 6:35 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். செப். 11 முதல் நவ. 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (16751), இரவு 7:42 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (16752), செப். 10 முதல் நவ. 9 வரை காலை 6:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை