மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு
26-Jun-2025
மேலுார்: திருவாதவூர் மின்வாரிய அலுவலகம் மூலம் உலகுபிச்சம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. மின் இணைப்புகள் அதிகரிப்பால் பற்றாக்குறையான மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. அதனால் மின் சாதன பொருட்களை உபயோகப்படுத்த முடியாததோடு பொருட்கள் பழுதாகின. மேலும் 'மின்சாரம் இருக்கு; ஆனா இல்லை' என்ற நிலை உருவானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.
26-Jun-2025