உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கு: தண்டனை

போக்சோ வழக்கு: தண்டனை

மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி முத்துக்குமார் 24. இவர் விளையாடச் சென்ற ஒரு சிறுவனை தனியாக அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாடிப்பட்டி போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல்: முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை