மேலும் செய்திகள்
கோயில் திருவிழா
08-Sep-2025
மேலுார் : வெள்ளலுார் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் பக்தர்கள் மதுக்கலயம் ஏந்தியும், பதுமைகளை சுமந்தும், வைக்கோல் பிரி சுற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவையொட்டி 60 கிராமங்களில் உள்ள 7 பிரிவுகளைச் சேர்ந்த 7 குழந்தைகளை செப்.16 ல் அம்மனாக தேர்வு செய்தனர். பின் அவர்களை வெள்ளலுாரில் உள்ள கோயில் குடியிருப்பு வீட்டில் 15 நாட்கள் தங்கி இருக்கும்படி செய்தனர். நேற்று கோயில் குடியிருப்பு வீட்டில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள கோவில்பட்டி ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு அம்பலக்காரர்கள் தலைமையில் 7 குழந்தைகளும் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைகோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் சிலை ஏந்தியும், சிறுவர்கள் பூக்கொடைகளை சுமந்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தேரோட்டம், நாளை (அக். 2) மஞ்சள் நீராட்டும், அக்.7 ல் கோயில் முன்புள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.
08-Sep-2025