உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆர்ச் மீது ஏறி போராட்டம்

ஆர்ச் மீது ஏறி போராட்டம்

வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டை அம்பேத் ராஜா 35, ஆட்டோ டிரைவர். இவரது மைத்துனர் யுவராஜ் 25. சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் கைதானார். அடைக்கலம் தந்த அம்பேத்ராஜா, மனைவியும் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த அம்பேத்ராஜா, போலீசார் பொய் வழக்கில் கைது செய்ததாக கூறி நேற்று மதியம் வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் ஆர்ச் மீது ஏறி பெட்ரோல் பாட்டில் உடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் வளர்மதி, தீயணைப்பு அலுவலர் பால நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர் சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். வேடிக்கை பார்த்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !