மேலும் செய்திகள்
புத்தாடைகள் வழங்கல்
28-Oct-2024
குறைதீர் கூட்டம்
07-Oct-2024
செய்திகளில் பிழை!
21-Oct-2024
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்து, சிறப்பு பூஜை நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார மூர்த்திகள், கோயில் அனைத்து மண்டபங்களிலும் உள்ள சுவாமி சிலைகளுக்கு அதிகாலையில் எண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, தீபாவளி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாடைகள் அணிவித்து, வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகி பூஜை நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர், எஸ்.ஆர்.வி. நகர் கோல்கட்டா காளியம்மன், திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன், கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் உற்ஸவர்கள் ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணர், ராமருக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியானது.
28-Oct-2024
07-Oct-2024
21-Oct-2024