உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊர்க்காவல் படைக்கு அக்.3 ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு அக்.3 ஆட்கள் தேர்வு

மதுரை: மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு அக். 3ல் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பத்தாம் வகுப்பு படித்த, 18 - 45 வயதிற்குட்பட்ட, சேவை மனப்பான்மை உடைய ஆண்கள் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பம், நாளை (செப். 24) முதல் செப். 30 வரை மாவட்ட ஆயுதப்படை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் அக். 3 காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் தேர்வில் பங்கேற்பவர்கள், கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி