மேலும் செய்திகள்
விபத்தில் ஒருவர் பலி
06-Aug-2025
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அருகே காமராஜர் நகரில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை. மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் முழுமையாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள், உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் நேற்று மதியம் 12:00 மணிக்கு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். உத்தப்பநாயக்கனுார் போலீசார், வருவாய்த்துறை, ஊராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர். மறியலால் மதியம் 12:00 முதல் 12:30 வரை வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.
06-Aug-2025