பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
மதுரை: மதுரை அழகர்கோவில் ரோடு வல்லப வித்யாலயா பள்ளி மாணவர்கள், அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நவ.7, 8ல் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். ஆரோக்கியம், ஒற்றுமை, ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில், இப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் மேற்கண்ட தேதிகளில், மதுரையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் வரை (233 கி.மீ.,) சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். நவ. 7 காலை 5:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் பயணம் துவங்குகிறது. 50 மாணவர்கள், 41 மாணவிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சத்திய நாராயணன், பாண்டியராஜன் மேற்கொண்டு, மாணவர்களை வழிநடத்துகின்றனர்.