மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பணி துவக்கம்
22-Jun-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மேல் தளத்திலுள்ள தட்டோடுகளில் 'டெரகோட்டா பெயின்ட்' பூச்சு நடந்தது.கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கோயிலின் மேல் பகுதியில் ராஜகோபுரத்தில் இருந்து மூலவர்கள் சன்னதி அமைந்துள்ள மலையை ஒட்டியுள்ள பகுதிவரை தட்டோடுகள் சீரமைக்கப்பட்டு அதன் மேல் கெமிக்கல் வாஷ் செய்துள்ளனர். அதன்மீது தற்போது டெரக்கோட்டா பெயின்ட் பூச்சு நடக்கிறது.இதனால் கூரையின் மேல் பகுதியில் மழை நீர் தேங்கி, ஊடுருவி கசிவு ஏற்படாது.கட்டுமானத்திற்கு சேதம் ஏற்படாது. வெப்பம் கடத்தப்படாது என்பதால் எந்நேரமும் கோயிலுக்குள் குளிர்ச்சியாக இருக்கும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.
22-Jun-2025