உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி எதிரொலியால் பதவி உயர்வு சம்பளம் வந்தாச்சு

தினமலர் செய்தி எதிரொலியால் பதவி உயர்வு சம்பளம் வந்தாச்சு

மதுரை: தினமலர் செய்தி எதிரொலியால் கல்வித்துறையில் ரிக்கார்டு அசிஸ்ட்டென்ட் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.இ.ஓ., டி.இ.ஓ., வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் ரிக்கார்டு கிளார்க்குகளாக பணியாற்றிய 167 பேருக்கு ரிக்கார்டு அசிஸ்ட்டென்ட் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதற்கான அடிப்படை சம்பளத்தில் ரூ.ஆயிரம் அதிகரிக்க வேண்டும். ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் பதவி ஐ.டி., பதிவேற்றம் செய்யும் பணியில் சிக்கல் நீடித்ததால் 108 பேருக்கு 6 மாதங்களாக சம்பளம் உயர்வு பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் அவர்களுக்கான பதவி ஐ.டி., பதிவேற்றும் பிரச்னை ஒரே நாளில் சரிசெய்யப்பட்டு 6 மாதங்களாக நீடித்த சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !