உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்து கோயிலில் தீர்த்த உற்ஸவம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்த்து, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து 1008 லிங்க கவச அலங்காரமானது.

சரவணப்பொய்கையில் குவிந்த மக்கள்

அமாவாசை தினங்களில் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க திரளாக வந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை