நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா துவக்கி வைத்தார். நிர்வாகிகள் கிருஷ்ணாபாண்டி, ஆறுமுகம், ரவி,ஜீவா, சுந்தரபாண்டி பங்கேற்றனர்.