உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு தோப்பு தெரு பகுதியில் சுக்கான் குளத்தில் இன்று மதியம் 12 மணியளவில் காரைமேடு, டி.மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் குளித்துள்ளனர். அப்போது டி.மணல்மேடு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வெற்றி வீரன் மகன் மாவீரன்.9, பிரகாஷ் மகன் சக்தி.9. ஆகிய இருவரும் குளத்தில் இருந்த ஆலமரத்தில் ஏறி குளத்தில் குதித்து விளையாடியுள்ளனர். அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் கரையில் இருக்க இருவரையும் காணவில்லை. இதனை அறிந்த கிராம மக்கள் குளத்தில் இறங்கி தேடினர். சமீபத்தில் இக்குளத்தில் மண் எடுக்கப்பட்டதால் ஆழம் அதிகமாக இருந்ததால் மக்களால் தொடர்ந்து தேட முடியவில்லை. தகவல் அறிந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு மாவீரன், சக்தி ஆகிய 2 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை