உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது

மயிலாடுதுறை, :மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை, 60, என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது இரண்டு பைபர் படகுகளில், 37 மீனவர்கள் கடந்த 20ம் தேதி, மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று, மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, மூன்று படகுகளை பறிமுதல் செய்ததுடன், 37 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ