உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்

புரிஞ்சிக்கவே மாட்டீங்களா! மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! இ.பி.எஸ். கண்டனம்

சென்னை; முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த கொலை நடந்திருப்பது, அதுவும் அதிக போக்குவரத்து நடமாட்டம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது, இந்த விடியா தி.மு.க., ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். ரமேஷ் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள விடியா தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ulaganathan murugesan
டிச 02, 2024 19:53

தூத்துக்குடியில துப்பாக்கிய வைச்சு 13 பேரை சுட்டு சாகடிச்ச சாத்தூர்ல அப்பா பையன் போலிஸ் ஸ்டேசன்ல சாகடிச்ச... உன் ஆட்சில சட்டம் ஒழுங்க நல்லா இருந்துச்சா


Kumar
டிச 01, 2024 21:09

அவர்தான் சிம்பிளா ஒரே வார்த்தை சொல்லிட்டாரே, எதிர்க்கட்சித் தலைவர் பேச்செல்லாம் மதிக்கிறது இல்லைன்னு. இதுதான் ஜனநாயகமா என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்