மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஈஸ்வரி, 41; கணவரை இழந்த இவர், இட்லி கடை நடத்திக்கொண்டு தன், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர், ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். அக்கம்பக்கத்தினர் ஈஸ்வரியை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025