உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரத்தியங்கிரா தேவிக்குமிளகாய் வற்றல் யாகம்

பிரத்தியங்கிரா தேவிக்குமிளகாய் வற்றல் யாகம்

பிரத்தியங்கிரா தேவிக்குமிளகாய் வற்றல் யாகம்ப.வேலுார்:-பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார், தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில், பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது.நேற்று மாலை, 5:00 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இரவு, 7:30 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது. யாக குண்டத்தில் மிளகாய்களை பக்தர்களே நேரடியாக வேண்டுதலுக்காக செலுத்தும்போது, சிறு நெடி கூட வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ