மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்388 மனுக்கள் அளிப்பு; 6 பேருக்கு உதவிநாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 388 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.மேலும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு இளங்கலை கணிதம் பயின்று வரும் மாணவி கீதாவுக்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, லேப்டாப்பை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து பேருக்கு, 35,800 ரூபாய் மதிப்பில், ஊன்று கோல், சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகராட்சி மேயர் கலாநிதி, எஸ்.பி., ராஜேஸ்குமார், டி.ஆர்.ஓ., சுமன், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.