உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்

பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்

திருச்செங்கோடு: கோல்கட்டாவில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, திருச்செங்-கோட்டில், ரோட்டரி இன்னர் வீல் சங்கம் சார்பில் கண்டன ஊர்-வலம் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி, துவக்கி வைத்தார்.ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணசிலை அருகே இருந்து துவங்கி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவ-டைந்தது. இதில், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டும். பாலியல் வன்கொடு-மைகளை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகராட்சி கவுன்சிலர்கள், கல்லுாரி மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி