உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

நாமக்கல்: நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு, ஐ.டி., சப்போர்ட் அண்ட் டெவ-லப்மென்ட் ட்ரைனிங் புரோகிராம் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடிந்ததையடுத்து, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செல்வம் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்-குனர் கார்த்திக் ஆகியோர், மாணவர்களை வாழ்த்தி பேசினர். கல்-லுாரி முதல்வர் ஜெகன், மாணவர்களை ஊக்குவித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, சென்னை மைண்ட் பிரஸ் முதன்மை செயல் அலுவலரும், ஊக்கமளிப்பு பேச்சாளருமான கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். அவர், கல்லுாரி வாழ்க்-கையின் முக்கியத்துவத்தையும், அத்துடன் புதிய திறன்களை கற்-றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், ''கற்-றலுக்கான ஆர்வத்தை உங்கள் வாழ்க்கை முழுதும் தக்க வைத்-துக்கொள்ளுங்கள் . புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மட்-டுமே மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை