மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
29-Aug-2024
நாமக்கல்: 'வரும், 28ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் காஸ் நிறுவன மேலாளர்கள், முக-வர்கள், வினியோகஸ்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன், 'காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்', நாமக்கல் கலெக்டர் அலுவ-லகத்தில், வரும், 28 மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகிக்கிறார். காஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, காஸ் வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Aug-2024