உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

நாமக்கல்,: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:.நாமக்கல் மாவட்டம் ஒருங்கி-ணைந்த பள்ளிக்கல்வி சார்பில், 10--14 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கொல்லிமலை ஒன்றியத்தில், மூன்று கே.ஜி.பி.வி., என்ற கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்-பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரியூர் கிழக்கு வலவு கே.ஜி.பி.வி., உண்டு உறைவிடப்-பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்-வியில் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமுடையவர்கள், நாமக்கல் மாவட்டம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலக மாவட்ட திட்ட அலுவலகம், நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகம், மோகனுார் சாலை என்ற விலா-சத்தில் விண்ணப்பங்களை பெற்று, நிபந்தனைகளுக்குட்பட்டு கருத்துருக்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்திய சங்கங்களின் சட்டம், 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.பெண் கல்வி சேவையில், குறைந்தபட்சம் மூன்றாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்-கப்பட வேண்டும். தங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித புகா-ருக்கும் உட்பட்டு இருக்கக்கூடாது. மேலும் அந்நிறுவனம் அரசால் ஏற்கனவே முடக்கப்பட்டிருக்கக் கூடாது. மூன்றாண்-டுகள் வரவு, செலவு தணிக்கை செய்த விவரம் கருத்துருக்களுடன் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்களை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலகம், நாமக்கல் தெற்கு மேல்நிலைப்-பள்ளி வளாகம், மோகனுார் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூலை, 25க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04286-227194, 98659 42054 என்ற எண்-களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை