உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 63 அரசு பள்ளிகளில் எழுத்தறிவு திட்டம் துவக்கம்

63 அரசு பள்ளிகளில் எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எலச்சிபாளையம், எலச்சிபாளைம் யூனியனுக்குட்பட்ட, 63 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை, குடியிருப்பு வாரியாக கண்டறிந்து, அவர்களுக்கு எழுத்தறிவு, அடிப்படை செயல்பாடு, எண்கள், பொது தகவல்கள் சார்ந்து கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.இத்திட்டத்தில், 190 ஆண்கள், 655 பெண்கள் என, மொத்தம், 845 பேர் கற்போர்களாகவும், 63 பேர் தன்னார்வலர்களாகவும் செயல்பட உள்ளனர். முன்னதாக, எலச்சிபாளையம் துவக்கப்பள்-ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா நடந்தது. இதில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துகுமார் தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் துவங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி