உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உரிய நேரத்தில் பார்சல் சேர்க்காத டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்

உரிய நேரத்தில் பார்சல் சேர்க்காத டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்

நாமக்கல்:நாமக்கல், பரமத்தி வேலுாரில் வசித்து வருபவர் கணேசன், 54. இவர் கடந்த, 2023 ஜூனில், சென்னையில் உள்ள தன் மகனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி, சேலத்தில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் வாயிலாக, ப.வேலுார் கிளையில், 520 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார். ஓரிரு நாளில் பார்சலில் செல்லவேண்டிய சைக்கிள் இரண்டு மாதம் கடந்தும் சம்பந்தப்பட்ட நபரிடம் சேரவில்லை.இதனால், சைக்கிளை பார்சலில் அனுப்பிய கணேசன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தனியார் பஸ் கம்பெனி மீது வழக்கு தெடர்ந்தார். வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், தீர்ப்பளித்தனர்.அதில் அவர்கள் உத்தரவிட்டதாவது:டிராவல்ஸ் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும், வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற சைக்கிள் பார்சலை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்காமல் சேவை குறைபாடு செய்துள்ளனர்.எனவே, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட இழப்பு, மன உளைச்சல், சிரமங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக, 4 வாரங்களுக்குள், டிராவல்ஸ் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை