உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு முட்டாஞ்செட்டி, புதுார், கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, எருமப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித்ததால் விற்பனை சூடுபிடித்தது. இதனால், கடந்த வாரம் வரை, 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் இந்த வாரம், 45 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை