ம.பி.,யில் இருந்து 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து
ம.பி.,யில் இருந்து 1,300 டன்கடுகு புண்ணாக்கு வரத்துநாமக்கல், நவ. 7-நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படுகிறது.அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணை தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,300 டன் கடுகு புண்ணாக்கு, சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத்தானது. பின், அங்கிருந்து, 50 லாரிகளில் ஏற்றி, தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.