உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ, 21.48 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ, 21.48 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்

ரூ, 21.48 லட்சத்துக்குதேங்காய் பருப்பு வர்த்தகம் ப.வேலுார், அக். 4--ப.வேலுாரில், 21.48 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு விற்பனை நடந்தது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். நேற்று, 21.48 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 20 ஆயிரத்து, 808 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 127.70, குறைந்தபட்சமாக, 101.19, சராசரியாக, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 27 லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்திற்கு, 17 ஆயிரத்து, 612 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 125.35, குறைந்தபட்சமாக, 119.89, சராசரியாக, 122.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 21 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி