உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சந்தையில் 63 டன் காய்கறி; ரூ.23.85 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தையில் 63 டன் காய்கறி; ரூ.23.85 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், தினமும் அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். நேற்று சித்திரை அமாவாசை என்பதால், வழக்கத்தைவிட விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 242 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். அதன்படி, 50,835 கிலோ காய்கறி, 12,145 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என மொத்தம், 63,015 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 12,603 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 23 லட்சத்து, 85,245 ரூபாய்க்கு விற்பனையாகின.தக்காளி ஒரு கிலோ, 17 ரூபாய், கத்தரி, 25 ரூபாய், வெண்டை, 30 ரூபாய், புடலங்காய், 52 ரூபாய், பீர்க்கங்காய், 54 ரூபாய், பாகற்காய், 40 ரூபாய், சின்ன வெங்காயம், 38 ரூபாய், பெரிய வெங்காயம், 25 ரூபாய், தேங்காய், 62 ரூபாய், இஞ்சி, 40 ரூபாய், பூண்டு, 160 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !