உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, பாலியல் வன்கொ-டுமை சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையடி கொடுத்-துள்ளார். தமிழகம் முழுவதும், இச்சம்பவத்தை கண்டித்து, பல்-வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை பின்பற்றி, வழக்கின் உண்மைத்தன்மையை வெளிக்-கொண்டுவர வேண்டும்.சி.பி.ஐ.,க்கு வழக்கை மாற்ற விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர்கள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ