உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பீரோவை திறந்து நகை, வாட்ச் திருட்டு

பீரோவை திறந்து நகை, வாட்ச் திருட்டு

மோகனுார்: மோகனுார், பள்ளி சாலையில் வசித்து வருபவர் வெற்றிச்-செல்வன், 48; கூலித்தொழிலாளி. இவர், குடியிருக்கும் வீட்டின் முன், வாசல்படி தளம் போடப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்கு வெளியே படுத்து துாங்கி உள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பீரோவில் பார்த்தபோது, உள் அறையில் வைக்கப்பட்டிருந்த, ஒரு பவுன் செயின், கோல்டு கலர் வாட்ச் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை