உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விடுமுறை அளிக்காத 56 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

விடுமுறை அளிக்காத 56 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

நாமக்கல்:மே 1, தொழிலாளர் தினமான நேற்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 56 வணிக நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், நேற்று தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.மொத்தமாக, 21 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 16 கடை மற்றும் வணிக நிறுவனங்களிலும், 44 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 36 உணவு நிறுவனங்களிலும், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 4 நிறுவனங்களிலும் ஆக மொத்தம், 71 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 56 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.எனவே, 56 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.*******************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை