கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
நாமக்கல், டிச. 24-ஏசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த டிச., 25ஐ கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி, நாளை, 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், ஏசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், வீடுகளில் குடில்களும் அமைப்பர்.அதேபோல், மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் ஆர்.சி., செசிலி நடுநிலைப்பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா, 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை ஜான்போஸ்கோ பால் தலைமை வகித்தார். மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், எஸ்.ஐ., இளையசூரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வார்டு உறுப்பினர் ஆரூன்ராஜா, ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.